மறுபடியும்
விரதத்தோடு
நீ
மறுபடியும்
திரவத்தோடு
நான்
அடுத்தடுத்த சந்திப்பிலிருக்கின்றன
மதுக்கடைகள்
கோயில்கள்
புறச்சூழலின்
கோரப்பிடியை
உதறிக்கடக்க
அவரவர்க்கு
ஒரு வழி
எவ்வழியாயினுமென்
அமைதியின் மடியில்
உறங்கட்டும்
ஆழ்மனம்
*பொன்.இரவீந்திரன்