எதிரிக்கும் இரங்குவாய் நன்நெஞ்சே
சாத்தியமா?
யோகாவில் அனஹண்ட யோஹா என்பார்கள்
அவர்கள் இடத்தில் (நிலையில்) அமர்ந்து
பார்ப்பது.
(உ .ம்) பிச்சைக்காரன் இடத்தில் நாம்
அவன் பிச்சை கேட்கும் போது.etc.,
- * - * - * - * - *
செல்வத் திருமகளே நின்னை
நித்தம் தொழுது நின்றேன்.
அள்ள அள்ள நீ தர
அல்ல அல்ல.
மெல்ல மெல்ல கடன் கட்டி
சொல்ல ஒரு குறை இல்லை என
எளிய வாழ்வு வாழ்ந்து
வெல்ல வல்ல விதியை
சகிப்புப் பெற்று
பிறருக்கும் உதவ, கடமையாற்றவே
போற்றுகிறேன்.
இங்கு இராமாயண கால
வன்மை இல்லையே ஒரு வறுமை இன்மையால்
சூழல் இல்லையே.
காளி நீயே என் தெய்வீக
எல்லையே
என்னால் உனக்குத் தொல்லையே.
ஆனால் இவை நல்க
உன்னால் முடியுமே
தில்லை முல்லையே
காளித் தாயே சரணம் சரணம் அம்மே!
பாசமுடன்
பாரதிப்பித்தன்.🌹🙏