Header Ads Widget

Responsive Advertisement

கதிரவனின் காதல்

கதிரவனென்ற ஆடவன்

இயற்கையென்னும் இளைய கன்னியைக் காண 

ஆவலாய் ஓடோடி வருகின்றான்

வழியில் ஏற்படும் தடைகளை மனமுடைந்து செப்புகின்றான்

எப்பொழுது விடியுமென்று காத்திருந்தேன்

பொழுதும் புலர்ந்தது

மனதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது

ஏறி வருவதற்குள்

பனிகள் வந்து மூடி

அவளை காண முடியாமல் செய்தன

அவைகளை விரட்ட படாத பாடுபட்டேன்

பனித்துளிகள் போர்த்தியிருக்கும்

என்னவளின் பளிங்குடலைக் காண ஆசை

ஆனால் அது முடியவில்லை

பின் மலைச்சிகரங்களும் முகடுகளும் குறுக்கே வந்து நின்றன

அதையும் தாண்டி ஏறி வருவதற்குள்

என் கதிர்வீச்சின் தாக்கத்தால்

என்னவளும் சோர்வுற்று அழகை இழந்து  காய்ந்து தீய்ந்து போகிறாள்

அவளைக்காண எக்கு கொடுத்து வைக்கவில்லையோ

என்றேனும் ஓர்நாள் நிச்சயம் காண்பேன் அவளை புத்தம்புது மலராய்

வானுயர்ந்து நிற்கும் எனக்கே இவ்வளவு தடைகள் என்றால்

மனிதனின் நிலை பாவம் தான்

தி.பத்மாசினி