ஏக்கம் பரிமளிக்க
ஏனிந்த பார்வை
காலைஎழுந்தவுடன்
படிப்பு உள்ளதோ
பரபரப்பு உண்டு
பாதித்தூக்கம்
பாதிபல்துலக்கல்
பாதி சிற்றுண்டி
பரிதவிப்பே
தினசரிவழக்கம்
பள்ளி வாகனமோ
பளிச்சென்று வெளியே....
செல்ல கிளிகளோ
பயத்துடனுள்ளே
அடுத்தடுத்தப் பாடங்களோ இயந்திரகதியில்
பதிவாகும் மூளைக்குள்ளே
இடைவேளைநேரம்
இடர்பாடாய் வந்து
சேரும்
நம்முறைவரும்நே
ரம்
எதிரொலிக்கும்
மணியின்ராகம்
மதியவேளையுண
வும்
கைக்கும்வாய்க்குமான போராட்டம்
மீறிவருமுன்னர்
மணியோசை அதிர்ந்தொலிக்கும்
விளையாட்டுநேரம்
வினாடிக்குள் முடிவதுமதிசயம்
மடிப்பு கலையா
உடையோடு
மங்கியமனதோடு
மறுபடி பயணம்
வீட்டுக்குள் நுழை
யுமுன்
வரிசையில்நிற்கும்
அடுத்தடுத்தடியூசன்கள்
வா என்னழைக்க
பாட்டனுமில்லை
வாய்நிறைந்தூட்ட
பாட்டியுமில்லை
கலைந்த சீருடை
எண்ணெய்காணா
தலையும் அட்டை
கிழிந்த புத்தமும்
கையில்தின்பண்டங்கள்
கொண்டுசாலை
முழுக்க ராஜநடை
போட்டே பாட்டுத்
தெரிக்க செல்லும்
நிஜ ராஜாக்கள் இவரே
ஆசியரிருடன்
ஆனந்தமாய்உரை
யாடும்
அமைச்சர் குழாம்
இவர்கள்
பயமற்றுநெஞ்சில்
நேசம் விதைக்கும்
நிலமலர்கள் இவர்கள். மதியவுணவிலும் மற்றவர்க்கு பகிரும் கொற்றவர்கள்
விளையாட்டைக்
கூட
நிஜமாய்நினைக்கும்
விளையாட்டு வீரர்
இவர்கள்
வீடுசென்றால் செல்லத்திட்டுடன்
சிறுபலகாரம் சிறு
குலாவலுடன் மறுபடியும் ராஜநடை போடும்
அரசுபள்ளிஇளவரசுகள்
ஏனிந்த பாகுபாடு
எதற்கு மனதில்
வேறுபாடு
வேண்டாம் இந்த
எல்லைக்கோடு
பணம் தவிர்ப்பீர்
மனம் வளர்ப்பீர்
இயற்கையின்
நியதி கண்டு
மழலையர்
கல்வியைத்தருவீர்
கௌரவம்பார்க்கும்
கல்வியும் ஒருவ
கையில்
கருணைக்கொ
லையே
என்றுணர்ந்து
ஏக்கம் தீர்ப்பீர்
🌹வத்சலா🌹