விழித்துக்கொள் மனிதனே..!
கால சூழ்நிலைக்கு
ஏற்றவாறு உன்னை
மாற்றிக்கொள்..!
ஆம்...!
மனிதமில்லா உலகில்
சொத்துக்களுக்கு
இருக்கும்
மதிப்பு கூட
மனிதனின்
சோகங்களுக்கு
இருப்பதில்லை..!
காசு பணத்திற்கு
இருக்கும்
மதிப்பு கூட
மனிதனின்
கண்ணீர்
துளிகளுக்கு
இருப்பதில்லை..!
அடாவடி
மனிதர்களுக்கு
இருக்கும்
மதிப்பு கூட
அன்பானவர்களுக்கு
இருப்பதில்லை..!
விழித்துக்கொள்
மனிதனே..!
சோகங்கள் ஒன்றும்
சொத்துக்கள் அல்ல
சேர்த்து வைப்பதற்கு
அதை அன்றன்றே
செலவு செய்துவிடு..!
கண்ணீர் துளிகள் ஒன்றும் விலைமதிப்பற்றவையல்ல
யாருக்கு வேண்டுமானாலும்
சிந்தி கொண்டிருக்க..!
அன்பு ஒன்றும்
அனாதையல்ல
தகுதியற்றவரிடத்திலும்
காட்டி ஏமாந்து விட..!
விழித்துக்கொள்
மனிதனே..!
இயந்திர
உலகிற்கு ஏற்ப
இசைந்து வாழ
கற்றுக் கொள்..!
மனிதாபிமானமற்ற
உலகில் மனிதத்தை
தேடி காலத்தை
கடத்தாதே..!
கடத்தினால்...!
காலவிரயத்தோடு
தொலைவதென்னவோ
உன் வாழ்வியலே...!!
✍️ கவி ரசிகை......
...... சுகந்தீனா