Header Ads Widget

Responsive Advertisement

விழுந்த தென்னையும் விழாத தென்னையும்



புயலின் தாக்கத்தால் விழுந்தது ஒரு தென்னை!
அதனருகே நின்றிருந்தது விழாத தென்னை!
அத்தென்னை
விழுந்த தென்னையைப் பார்த்து மனங்கலங்கிப் புலம்பியது!
கைகள் எனக்கிருந்தால் விழவிட்டிருப்பேனா உன்னை?
அருகருகே இரட்டைப்பிள்ளைகளாய் வளர்ந்த தென்னம்பிள்ளைகள்
அன்றோ நாம்!
இன்றோ நானிருக்க நீயோ வீழ்ந்துவிட்டாயே!
துணையில்லா ஒற்றைத் தென்னை ஆனேனே!
என்கண்ணெதிரே
துடிதுடிக்க நீ சாய்ந்து மாய்ந்ததென்ன?
அதை கண்டபின்னும் வீழாமல் நான் நின்றுக்கொண்டே இருப்பதென்ன?
இன்னும் சிறிதுநேரத்தில் உன்னை அப்புறப் படுத்துவார்களே!
துண்டுதுண்டாய் வெட்டுவார்களே!
என்னங்கம் பதறுகிறதே!உன்குலை தள்ளிய தெங்குகள் மண்படிய படுத்திருக்க அழகான தோகையோ விரித்தபடி அலங்கோலமாய் புரண்டிருக்க
செய்துவிட்ட கடும்புயலை என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே!

த.ஹேமாவதி
கோளூர்