கண்களில்...
தூசு பட்டால்
வரும்
கண்ணீரை
விட...
மனதில்
மாசுபட்டால்
வரும்
கண்ணீரே
அதிகம்...!!
கண்ணீரை
தந்தவர்கள்
காணாமல்
போயிருந்தால்
கூட
பரவாயில்லை...!!
கண்ணெதிரிலேயே
இருந்து
காலத்துக்கும்
கஷ்டப்படுத்தி
கொண்டிருப்பதே
தினம் மனம்
படும் துயரம்...!!
கண்களில்
விழுந்த
தூசியை
துடைக்க
கைகளும்...!!
மனதில்
விழுந்த
மாசுகளை
துடைக்க
கண்களும்...!!
நித்தம்
நித்தம்
போராடி...!!
மொத்த
வாழ்க்கையும்
கலங்கடித்து
விடுகிறது...!!!
இப்படி
ஒன்றுமில்லாமல்
போன
வாழ்க்கையில்...!!
கடைசியில்
கடினத்தின்
கண்ணீர்
துளிகள்
காணாமல்
போவதென்னவோ...!!
மரணமெனும்
வாசலில்
தான்...!!
✍️கவிரசிகை.....
.....சுகந்தீனா