உறைகின்ற பனியினிலே உயிர்போக்க வேண்டாமென
நிறையுடைய மனத்துடனே கீழிறங்க அனுமதித்தார்
பனிமலையின் உச்சியிலே படையில்லா நாளினிலே
இடைபுகுந்த ஈனர்கள் இனியெமதுயென நினைத்தார்.
ஊனமடா உன்நினைப்பு தானமல்ல எம்நினைப்பு
என்றிவரும் புரியவைத்தார் ஓடிவிடு என்றுரைத்தார்
தாண்டிவந்த தைரியத்தில் தாவளத்தைப் போட்டவரின்
தாடையை உடைத்துவிட்டு ஓடவைத்துப் பார்த்திருந்தார்.
வீணாகச் சண்டைக்குச் செல்வதல்ல எம்மரபு
வீணர்களின் இடையொடித்துத் துரத்துவது எம்மியல்பு
தவறிக்கூட பிறன்மனையில் எகிறலல்ல எம்மரபு
தவறுசெய்வோர் எவரெனினும் தலையெடுப்ப தெம்மியல்பு.
புரியவைத்த நாள்முடிந்து, முடிவுகண்டு கொடியுயர்ந்து
கொடியவர்கள் அடிபணிந்து, கார்கிலிலே கரமுயர்ந்து
தேசபக்தி நிலைநிறுத்தி இருபது ஆண்டுகள்
வீரத்தை நிலைநாட்டி இருபது ஆண்டுகள்.
*கிராத்தூரான்