(கட்டளைக் கலித்துறை)
மனம்போல் விரும்பிய வாழ்வு(ம்) அமைந்தால் மகிழ்ந்திடுவோம்!
கனவுகள் யாவும் நனவாய் நடந்தால் களிப்படைவோம்!
சினந்தனை நாம்தான் தவிர்த்திட வாழ்வில் சிறப்படைவோம்!
மனத்தைத் திருத்தி மலராய் மணப்போம் மண்ணினிலே!
(1)
பெய்யும் மழையால் உலகின் அசுத்தம் பெயர்ந்துவிடும்!
செய்யும் செயலில் கவனம் இருந்திட செம்மையாவோம்!
செய்த தவறினை யெண்ணி வருந்த சிறப்படைவார்!
செய்த தவற்றை மறைப்பவர் வாழ்வில் சுணங்குவாரே!
(2)
தவறு புரிந்து வருந்திடும் மாந்தர் திருந்தவேண்டும்!
தவறு புரிந்திட வாய்ப்பு கிடைத்தால் துறக்கவேண்டும்!
தவறு புரிந்தால் துணிந்து பகன்றிடும் திண்மைவேண்டும்!
தவறு மறுபடி செய்யா தவராய்த் திகழுவோமே!
(3)
த.ஏமாவதி
கோளூர்