மனத்தளவில் உனக்கு
அணுவளவு தன்னம்பிக்கை
வேர்விட்டால் போதும்....!
தடையென உன் முன்
கிடந்தவை யாவும்
இடிந்து நொறுங்கிப்போகும்!
வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்...
அனைத்தும் செழித்து
படர்ந்து வளரும்!
மனத்தளவில் சீரிய எண்ணம்
முளைவிட்டால் போதும்...
சுமையென துயர்தந்த யாவும்
விலகி நகர்ந்து மறைந்தே போகும்!
நல்லோர்க்கு நலம்சேர்க்கும்
எல்லாமே பலம் சேர்த்து பரவி...
தொடர்ந்திடும்!
மனத்தளவில் சிறு பொறியாய்
மாற்றம் கனன்றால் போதும்...
பொய்மைக்குத் துணைபோன யாவும்
உடைந்து சிதைந்து
சிதறிப்போகும்!
உண்மைக்கு துணையாகும் யாவும்
நிமிர்ந்து நிலைத்து ....
வலிமைசேர்க்கும்!
மனத்தளவில் நேர்மை
சிறுவித்தாய் முளைத்தாலே போதும்!
கீழ்மைக்கயமை நினைவெல்லாம் ...
கிழிபட்டு ஒழிக்கப்பட்டு
அனலிடை வீழ்த்தப்படும்!
உன்னதத்தின் சிறப்பங்கே
உயர்ந்து வளர்ந்தே....
நிலைத்திடும்!
🌹🌹வத்சலா🌹🌹