ஐந்து பிள்ளைகளின் அன்பான அம்மா
அன்போடு அறிவையும் பண்போடு பரிவையும் பாசமுடன் ஊட்டி வளர்த்த எங்களது அம்மா.
மேமாத விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கும்
பிள்ளைகளின் வருகைக்காய் பிரியமுடன் பார்த்திருக்கும்
பிரியமான எங்கள் அம்மா.
நோய் தந்த வலியெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு
பேரப்பிள்ளைகளை, பிள்ளைகளைப் பார்த்து நிற்கும்
ஈடு இணை எதுவுமில்லா ஓர் உறவு அம்மா.
அன்னையர் தினமென்று தெரியாமலே இன்று
குடும்பமாக வெளிசெல்ல விரும்பி நின்ற அம்மா
சென்று வந்து மனம் நிறைந்து மகிழ்ந்து நிற்கும் அம்மா.
இன்றுபோல் எந்நாளும் கவலைகள் எதுவுமின்றி
இன்பமோடு வாழவேண்டும் இனி என்றும் அம்மா
ஒற்றுமையைப் பேணவேண்டும் எந்நாளும் அம்மா.
உலகத்துப் பிள்ளைகள் எல்லோரும் அன்னையரை
தெய்வமாகக் காணவேண்டுமம்மா
அதற்கு அருள்புரிந்து அருளவேண்டும் அம்மா
உலகம் காக்கும் அன்னையான அம்மா,
ஆதி பரா சக்தியான அம்மா.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*