சுற்றத்தினால் ஆன தனிமையினால் முற்றத்திற்கு வந்தேன் 

ஓர் முகவரியாய்,,,,

முற்றத்திலும் தனிமையா,,,?

இது முடிவில்லா கொடுமைய்யா!

முருகைய்யா,,,!!


எட்டுக்குடி கெட்டதும் தனிமையிலே,,,

அது, 

பட்டுக் கொடி நட்டதும் தனிமையிலே

விட்டுக் கொடு கெட்டாலும் உறவினிலே,

தொட்டு விடு தூரத்தை முடிவினிலே,,,


ஊர் கூடி தேரிழுத்தால் தெருவினிலே,,,

ஒடி வந்து நிற்குமது கோயில் நடையினிலே,,,

ஒருவன் மட்டும் வடம் பிடித்தால் தனிமையிலே

ஊரெல்லாம் சிரிக்குமப்போ

உண்மையிலே,,,


ஒற்றுமையே வலிமையென இருக்கையிலே,,,

எதையும்

உள்வாங்க வேண்டுமா தனிமையிலே,,,

அரசமரம் வேப்பமரம் அருகினிலே,,,

வளர்ந்து, இருந்திடுமா இரண்டிலொன்று தனிமையிலே,,,


நீயின்றி 

நானேது உலகினிலே

நாம்,

உயர்ந்திட வேண்டுமென்று பன்மையிலே,,,

பார் அறிய முன்னோர்கள் உரைக்கையிலே,,,,

இருக்கலாமா நாமிருவர்

தனிமையிலே,,,,!✍🏻


பாலா