யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
பழமொழியா, பிழைமொழியா பலருக்கிங்கே குழப்பம்.
வாய்ஜாலம் செய்வோர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்
செயல்வடிவம் கொடுப்பவர்கள் நலிந்து கொண்டே வருகிறார்கள்
யானைக்குக் காலமா பூனைக்குக் காலமா
பரிதவித்து நிற்கின்றார் பலபேர்.
வாழ்க்கையிலே நடிப்பவர்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
வாழவைத்து வாழ்ந்தவர்கள்
வாழ்விழந்து தவிக்கிறார்கள்
யானைக்குக் காலமா பூனைக்குக் காலமா
புரியாமல் நிற்கின்றார் பலபேர்.
கெடுத்து வாழ்வோர் வாழ்கின்றார்
கொடுத்து வாழ்வோர் அழிகின்றார்
ஏன் என்றுப் புரியாத கலக்கம்
யானைக்குக் காலமா பூனைக்குக் காலமா
புரியாமல் நிற்கின்றார் பலபேர்
புரிய முடியாமல் தவிக்கின்றார் பலபேர்.
*சுலீ. அனில் குமார்.*