Header Ads Widget

Responsive Advertisement

கவிஞன்



கவிஞனென்றால்
காதலையும்
கருத்துக்களையும்
சொல்லிக்கொண்டு
சிறு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனல்ல...!!

அன்பையும்
அரவணைப்பையும்..!!

நட்பையும்
தோழமையும்..!!

காதலையும்
கண்ணியத்தையும்..!!

ஆசைகளையும்
வலிகளையும்..!!

ஏமாற்றங்களையும்
துரோகங்களையும்..!!

இயற்கையையும்
மௌனத்தையும்..!!

துளிர்க்கும்
துளிர்களையும்
பூக்கும் பூக்களையும்..!!

பறக்கும்
பறவைகளையும்
வானத்து
நட்சத்திரங்களையும்..

உயர்வையும்
தாழ்வையும்..!!

சமூகத்திற்கான
சிந்தனைகளையும்..!!

கோபத்தையும்
வெடித்து சிதறும்
எரிமலைகளையும் கூட..!!

இப்படி...
பிரபஞ்சத்திலுள்ள
அனைத்தையும்
கற்பனையில்
எழுத்துக்களாய்
கொண்டு வருபவன் தான்
சிறந்த கவிஞன்....!!!


✍️கவிரசிகை....
            .....சுகந்தீனா