Header Ads Widget

Responsive Advertisement

வீரமாமுனிவர்

மதங்கடந்து வாழ்பவரே
உண்மைத் தமிழர்!
ஆங்கிலத்தின்
தத்துப்பிள்ளையாய்
மொத்தமாய் அனுப்பப்பட்ட
ஒத்தைப்பிள்ளை நான்!
மீண்டுவந்தபோது........
பந்தயத்தில் ஆரம்பப்புள்ளியிலேயே
ஆணியடித்ததாய் நின்றிருந்தேன்.....!
அகரம் துவங்கினேன்
சிகரம் நோக்கி பயணம்
தொடர்கிறேன்.....
தமிழ்பாலருந்திய தெம்பால்!
தேன் பாடலை அணியாய்
தேம்பாவணியாய் பூட்டி
தமிழ்கூறும் நல்லுலகில்
தவழ்ந்தேன் மழலையாய்!
சிலுவைக்காட்சியை
சீராக தமிழில் செப்பிய
மா முனி  !அவர்
தமிழ்க்கடலில் மிதக்கும்
தங்கத் தோணி!
தமிழுக்கு மணமுண்டு மதமில்லை என்பதை
காதங்கடந்து வந்து அவர்
கற்றது தமிழ் !அவரால் நாம்
பெற்றது தமிழன்னைக்கு
விலையேறப்பட்ட அணி!
தமிழால் இன்னமும்
வாழ்கிறார் தமிழாகவே!
அவரின் பிறந்த நாளை
தமிழால் கொண்டாடுவோம்!

🌹🌹வத்சலா🌹🌹
இன்று தேம்பாவணி தந்த
கான்ஸ்டான்டி நோபில் எனும் “வீரமாமுனிவர் “ பிறந்தநாள் கவிதை