Header Ads Widget

Responsive Advertisement

வருக என் அன்பான தைமகளே!


உன்னை இப்படி வரவேற்க
ஆவல் மிக உண்டு
ஆனால்
கடந்த காலநிகழ்வுகள்
அறியாது நீ வந்தால்
புகுந்த வீடு வந்த 
புதுமருமகளாய் நீ
மிரளக்கூடாதேயெனும்
ஆதங்கத்தால் கழலுகிறேன்
கேட்பாயோ புதுமகளே!
கடந்த வருடமும் தைத்திருநாள் பட்டபாடு
தேள்கொட்டியவலியாய்......
தமிழ்ப்புத்தாண்டா?
தைத்திருநாளா? எதை முன்வைத்து வார்த்தைப் பறிமாறுவது என்றெழுந்து
ஆரம்பித்த பட்டிமன்றக்
அலப்பரைகள் முடிவு 
காணப்படாமலேயே
ஒத்திவைக்கப்பட்டது!
தமிழரின் பண்பாட்டை
தரைக்குள் புதைக்கும்
அத்துணை ஏற்பாடுகளும்
ஆரவாரமின்றிநடத்தப்பட்ட
                                      து..
வந்தாரை வாழ்வுக்கும்
தங்கத்தமிழகம் தரமற்ற
தருக்கர் கையில் சிக்கி
தாறுமாறானது
நிலத்தடி நீர்வற்றி
பூமித்தாய்க்கே விக்கலெடுத்தது!
மண்காக்கப் புறப்பட்ட
மாவீர கூட்டம் பேதமின்றி
மண்ணடிக்கு போனது!
உண்மைக்காதல் காற்றில்
கரைந்தே போனது!
கள்ளக்காதலோ மிக
மலிந்தே போனது!
தன்சொந்த இரத்தமும்
தரைதெளிக்கும் நீராய்
ஆனது!
இயற்கையும் தன்பங்கை
செவ்வனே செய்தது!
கூலிப்படைகள் 
கஜா வடிவில் கிளம்பி
கறையான நிகழ்வை
வரலாற்றில் பதித்தது!
ஆனால்.........
சோறின்றி கூட வாழும்தமிழ
                     ன் உழவெனும்
வேரின்றி வாழ்தலியலுமோ?
தன்வளம் குறையினும்
மண்வளம் ஏற்றினான் ........
மகசூல்கொடியேற்றினான்!
நாடுகாக்கும் போர்வீரனுக்கு
                    இணையானவன்
வீடுகாக்கும் விவசாயி.......
சுகங்காண சர்க்கரைப்
                        பொங்கல் !
வளமை என்றுங்காண
வெண்பொங்கல் என
விதவிதமாய் படைத்துன்னை
மனமாற அழைக்கின்றான்!
மனங்கனிந்தவன்வாழ்வில்
வளமனைத்தும் நீ
சேர்ப்பாய் எனும் நம்பிக்கையால் அழைக்கிறேன் வருக என்
அன்பான தைமகளே!

🌹🌹வத்சலா🌹🌹