Header Ads Widget

Responsive Advertisement

நதி



மனிதர்கள் வருவார்கள் 
மனிதர்கள் செல்வார்கள்
நிலைத்து நிற்பவள் நானே - என
இறுமாந்து இருந்தவள் நானே.

நாகரீகத் தொட்டிலாய் 
நன்செய் நிலக் கட்டிலாய் 
ஊட்டி வளர்த்தவள் நானே-  என
மமதை காட்டி நின்றவள் நானே.

தனியாக நிற்காமல் இரண்டறக் கலந்தால் 
வித்தியாசம் தெரியாது என்றே
இணைக்கும் பழக்கத்தை இப்புவனம் 
தொடர 
சொல்லிக் கொடுத்தவள் நானே.

கரையின்றிப் போனதால் 
கரை கடந்து போனவள் 
அணைகட்டித் தடுத்ததால் 
அடங்கிப் போய் விட்டவள்
இரக்கம் காட்டி நின்றதால் சுருங்கிப்போய் விட்டவள் நான்.

இறுமாப்பைக் குறைப்பதற்காய் மனிதன் எனைக் காய விட்டான்,
மமதையுடன் பாய்ந்த என்னை நீருக்காய் அலைய விடடான்,
யானைக்கொரு காலம் என்றால் பூனைக்கொரு காலமென்றான்.

திசைமாறிப் போனாலும் நீரின்றி வறண்டாலும் 
வருங்காலம் எதிர் பார்த்து நிற்பவள் நான்,
நம்பியோரைக் கைவிடாத குணத்தினள் நான்.

நன்மையையே நினைத்திடும் மாண்பினள் நான்.

*கிராத்தூரான்*