இது என்ன
குலுக்கல் சீட்டுவிற்பனையா?
பண்டிகைக்கால
தள்ளுபடி விற்பனையா?
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவச விற்பனையான?
முழுதும் முந்நூற்று
அருபத்தைந்து
நாட்களின்
பெருங்காவியம்!!!!
இதிலடங்கும் கணக்கில்
வராத காண்டங்கள்
எத்தனையெத்தனை......?
கண்ணீர்க்கதைகள்,
ஏதிர்ப்பார்ப்பு பாடல்கள்,
பழிவாங்கும் படலங்கள்,
சிதைந்திட்ட கனவுச்
சிறுகாதைகள்.....!!
வேடதாரிகளின் பெரு
வெண்பாக்கள்......!!!
இரத்த உறவுகளை
இச்சித்த குறும்பாடல்கள்...
சொந்த இரத்தங்களை
சீரற்று சிதைத்த மரபுமீறல்
கவிதைகளென;;;
இருட்டுக்காவியங்களையும்,
மருத்துவ குறளிவித்தைகளும்,
ஆணவக்கொலைகளும்,
ஆதிக்கச்சீர்கேடுகளும்,
காமத்துபாலே
சாமத்துக்கும் நினைவாக;
எனத்தொடரும்
சிறுபொழுதுகளையும்
தாண்டிவந்தால்......
மனிதம்வாழ மரணிக்கும்
மாண்புகளையும்!
சாதி மதங்கடந்து
சாதிக்க எழும் மனங்களையும்்!!
விலங்கோடனைந்து
வியத்தகு சாதனைசெய்த
வீரகாவியங்களையும்!!!
பால்வற்றிய மனங்களிலே
நீரூற்றிய நீதிதேவர்களையும்!!!
மதயானைச் சிதைத்த பூமியை
மனமொத்துத் தூக்கியெடுத்த மாசறு
தங்கங்களையும்!!!!
கொண்ட பெருங்காப்பிய
பகுதியும் கொண்ட புத்தகம்!!
இதிலிருந்து நாம்
கற்று வந்த ,பெற்றுவந்த,
அனுபவப் பாடங்களுக்கு
இறுதி சொல்லுமா
இந்த இன்றேகடைசி
கூப்பாடுகள்???
🌹🌹வத்சலா🌹🌹