அரும்பாக நீ வந்து மொட்டாக நீ மாறி
மலராக விரிகின்ற நாள்பார்த்துக் காத்திருந்தேன்.
வண்ணங்கள் பலசேர்த்து
உளம்மகிழ மணம் பரப்பி
வண்ணத்துப்பூச்சியுனை
நாடிவரப் பார்த்திருந்தேன்.
கண்ணுக்கு விருந்தாக
மனத்துக்கு இதமாக
கன்னியரை நீ கவரும்
பொழுதுக்காய் வேர்த்திருந்தேன்.
உலகத்தில் நீ பிறந்த பயனதனை உனக்களிக்க
உன்மீது விழிநட்டு கண்கள் பூத்து நானிருந்தேன்.
என்னவளும் காத்திருக்க
என்வருகை பார்த்திருக்க
கண்ணவளின் கார்குழலில்
பூச்சூட வா புது மலரே.
என்னவளுக் கழகுசேர்க்க
மலரோடு மலர் இணைய
பூச்சூடவா புது மலரே.
*சுலீ. அனில் குமார்*