Header Ads Widget

Responsive Advertisement

கதம்பம்



என் அப்பன் முருகனுக்கு முல்லைப்பூ மாலைகட்டி
கழுத்தினிலே போட்டுவிட்டால் முத்தமிட்டு அது மகிழும்.

செவ்வரளிப் பூவெடுத்து சீராக அதைத் தொடுத்து
தலையினிலே சுற்றிவிட்டால் கிரீடம் தலைகுனியும்.

மதுரை மரிக்கொழுந்தால் மனதார  பூஜை செய்தால்
மணம் கமழும், மனம் மகிழும், கண் நிறையும், மனம் நிறையும்.

சாமந்திப் பூ தொடுத்து சாந்தி வேண்டி அணிவித்தால்
சாந்தத்தால் மனம் குளிரும்,
அகம் மலரும், முகம் மலரும்.

ஒரே பூவில் மாலை கோர்க்கப்
போதாமல் நான் தவிக்க
தோட்டத்துப் பூவெல்லாம்  கண்சிமிட்டி அழைத்ததென்னை.

பல பூக்கள் ஒன்று சேர பல நிறத்தால் அழகு கூட
கதம்ப மாலை தொடுத்து நானும் கடம்பனுக்கு சார்த்தி நின்றேன்.

ஒரு பூவோ ஓரழகு பலபூவோ தனியழகு
அழகுக்கு அழகுசேர அழகனவன் கேட்டு நின்றான்...
அழகனவன் கேட்டு நின்றான்
கண்டுகொண்டாயா....
கண்டுகொண்டாயா
ஒற்றுமையின் பேரழகை.

*சுலீ. அனில் குமார்*