Header Ads Widget

Responsive Advertisement

என் தேவதை


என் முகம் காணா முன்னமே

என்னை கொஞ்சி முதத்தமிட்டு 

ஊணும் கொடுத்து

உயிரும் கொடுத்து 

கல்வியும் கொடுத்து

அறிவும் கொடுத்து

ஆற்றலும் கொடுத்து

உண்மையை போதித்து

அறநெறியை காண்பித்து

பாலுடன் பண்பையும் ஊட்டி

பாசத்தையும் கூட்டி

நேசத்தையும் காட்டி

வயிற்றையும் நிரப்பி

செவியையும் நிரப்பி

நன்மையை செய்யவும்

தீமையை விட்டு அகலவும் வழிகாட்டி என்னை பட்டதாரி ஆக்கி

அரசு வேலையும் வாங்கித் தந்து

என் தலையை உயர்த்தி

இவ்வுலகில் என்னை தலை நிமிர்ந்து நடக்கச் செய்த என் தாய் தந்தையரே 

எனக்கு தேவதை ( கள்)


தி.பத்மாசினி சுந்தரராமன்