Header Ads Widget

Responsive Advertisement

கானல்நீராய்...

தாகம்தீர்க்க
காகம் தவியாய்
தவித்த தருணங்களில்
குவித்து வைத்திருந்த கல்குவியலும் கைவிட்டது.

மோகம்தீர்க்கும் மனிதனிடம்
தாகம் தீர்க்க
தண்ணீர்கேட்டது 
காகம்..
யாகம் வளர்த்து
மழையை வரவேற்க
கடவுளிடம் வேண்டுகோள் விடுத்தோம் கடவுளும்
கைவிட்டது மனிதர்களை..

காகம்  எச்சமிட்ட
விதைகளையெல்லாம்
துச்சமாய் நீ
எண்ணினாய்
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
மரங்கள்
மழையும் கானல்நீராய்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..