Header Ads Widget

Responsive Advertisement

அலமாரி



அறை அறையாய் பிரித்து வைத்து

அதனுள்ளே நினைவை வைத்து

பத்திரமாய்ப் பூட்டி வைத்தேன் உள்ளமெனும் அலமாரி.


சோகத்தை அடியில் வைத்து அதன் அருகில் காதல் வைத்து

திறக்காத பூட்டெடுத்து இரண்டையுமே பூட்டி வைத்தேன்.


ஓர் அறையில் பாசம் வைத்து

மறு அறையில் மகிழ்ச்சி வைத்து

கண்ணாடி மூடி போட்டுக் 

காணுமாறு நிறைத்து வைத்தேன்.


பாசமது குறைந்தால் தான்

மகிழ்ச்சியது தொலைந்தால் தான்

காதலதை, சோகமதை வெளியெடுக்கும் விதத்தில் வைத்தேன்.


பூட்டிவைத்த பொருளதுவோ

பத்திரமாய் உள்ளிருக்க

பாசமுடன் மகிழ்ச்சி பொங்கி அலமாரி நிறைந்திருக்க

துள்ளிக் குதிக்கிறது உள்ளமெனும் அலமாரி

என் உள்ளமெனும் அலமாரி.


*சுலீ. அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*