மண்பானைத் தண்ணீரை இனிமேல்.. மனம் விரும்பி குடிக்கலாமா?
வெயில் உடல்படக் கைவீசி....கொஞ்சம் வியர்க்க நடக்கலாமா?
பிள்ளைக் காலம் போல் பேசி பேசிச்... சிரிக்கலாமா ?
மாலைக் காற்றில் மணலில்... கை போட்டு நடக்கலாமா?
வளர்ந்து விட்டால் தான் என்ன ? .. விளையாடிப் பார்க்கலாமா?
கழுதை வந்தால்தான் என்ன? கொஞ்சம் பாடிப் பார்க்கலாமா?
மின்மினி விண்மீன்கள் அழகைக்... கண்டு ரசிக்கலாமா?
விரும்பும் கதைகள் பேசி.. மனம் விட்டுச்.... சிரிக்கலாமா?
இரவுதோறும்இசை கேட்டு.. மனம் கனிந்து உருக லாமா ?
அகவை கடந்தால் தான் என்ன?.. வீட்டில் முடங்கி கிடக்கலாமா?
புதிய எண்ணங்கள் கொண்டு ...கொஞ்சம் புரிந்து வாழலாமா?
💃💃💃💃💃💃💃💃
தெய்வானை,
மீஞ்சூர் .