ஆயிரம் உறவுகள் இருந்தும்
யாருமே இல்லாதது போல்
உணர்கிறேன்
நிலவே நீ வானில் இல்லாத
பொழுதுகளிலெல்லாம்!
தேவைக்காக மட்டுமே
பேசும் உறவுகளை விட......
என்னிடம் பேசுவதையே
உன் தேவையென
நினைக்கும் நிலவே உன்
மௌனம் ஒன்று போதும்..
என்னை மரணம் வரை
கொண்டுபோகும்!
நீயற்ற நேரமெல்லாம்.....,.
நீரற்றகடல்போல்
வானும் வறண்டே தோணும்!
கருமேகந்தனைக்
கலைத்து வெளியே
நீ வரும் நேரம்.........
தாரகைகள் வான்மீதில்
தங்கப்பொடித்தூவும்!
இத்தனையும்.......... தெரிந்திருந்தும் ஏன்
இந்தகண்ணாமூச்சியாட்டம்
மௌனம் கலைத்து
வெளியே வா என்நிலவே.....
வண்ணத்துப்பூச்சியாட்டம்!
!!!இரவு வணக்கம் இனிய இதயங்களுக்கு!!!
🌹வத்சலா🌹