நீரின்றி இவ்வுலகில்லை
அவ்வாறே
நண்பா நீயின்றி
என்வாழ்வில்லை!
விழியாலே என்மனம் உணர்வாய்! எனக்கு புரியும்வண்ணம்
விழியாலே உறவாடி
ஆயிரம் யானைபலத்தைத் தருவாய்!
சோர்ந்திருக்கும் நேரமெல்லாம் ஆடிப் பெருக்காய்
ஆறுதல்மொழி பேசிமகிழ்ச்சியை பூக்கவைப்பாய்!
தாங்குவாயோ தாங்கமாட்டாயோ என்றெல்லாம் பாராது என் அத்தனை மனப்பாங்களையும் இறக்கி வைப்பேன் உந்தன்மீது!
நீயோ புன்னகைத்தவாறே சுமைதாங்கியாகி
எனக்கு இளைப்பாறுதல் தந்து பிறகு அச்சுமைகளிலிருந்து
பூரணவிடுதலையும் தருவாய்!
கனத்த நெஞ்சோடு உன்னிடம் வரும்போதெல்லாம் தோளிரண்டில் தலைசாய்த்து உன்கைகளால் வருடுவாய்!
ஆஹா அவ்வருடலின் இதத்தை உன்னையன்றி வேறுயார் எனக்குத் தருவார்!
நண்பா உன்நட்பின்றி இம்மண்ணில் நானேது?
த.ஹேமாவதி
கோளூர்