பார்த்த பொழுது
மனதில் பட்டாம்பூச்சி
சில்லென்று உணர்வு
ஏதோ செய்யும்
வார்த்தை தந்தியடிக்கும்
அருகில் இருந்தால்
ஆரவாரம் செய்யும்
மனது
பிரியும் போது
ஊமையாய் அழும்
பார்வையில் பாசம்
தொடுதலில் நேசம்
பற்றலில் நெகிழ்வு
மனது மட்டுமே
அறியும் உறவு
நம் காதல்