ஓடை நிறையச்செழித்திருக்கும்
பூ பூத்தபடி
சம்பை
சம்பைக்குள்
ஒளிந்திருக்கும்
சம்பைக்கோழிகள்
கோழி பிடிக்க
மூச்சடக்கி
நீருக்குள் தவமிருக்கும்
விடலைகள்
ஓடைக்குள் இறங்குகிறார் அப்பச்சி
விளைந்த சம்பையை
அறுத்துப்போய்
கோடையில்
வீடு வேய
*பொன்.இரவீந்திரன்*