Header Ads Widget

Responsive Advertisement

துளிகள் - த.ஹேமாவதி


                1
இரட்டைக்கோலம்

வாசலில்தான்
கோலம் போடவந்தாள்!
ஆனால்
அவளையும் அறியாமல்
அவன் மனதிலும்
காதலெனும் கோலம் போட்டுவிட்டாள்!
               2
அவனது நாட்காட்டி

அவளின் முகத்தைப்
பார்க்கும்போதெல்லாம்
அவனது நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள்!
            3
அகன்ற கண்ணாடி

வானமங்கை
முகம் பார்க்கும்
அகன்ற கண்ணாடி
நீலக்கடல். 

த.ஹேமாவதி
கோளூர்