தொலைத்து
விடாதே
பின் தொலைந்து
போவாய்...!!
இணையத்தில்
இளைப்பாறி விட
எண்ணி விடாதே
ஏமாற்றம்
அடைவாய்...!!
இரண்டு
இதயங்கள்
இணையத்தில்
இனம் புரியாமல்
இடம் மாறுவதே
இம்சையின்
இதமான
இயக்கங்கள்...!!
இரண்டொரு
நாட்கள்
அல்லது
இரண்டொரு
மாதங்கள்
கடந்தபின்
இதமான
இயக்கங்கள்
அனைத்தும்
இறுக்கமான
இயக்கங்களாக
மாறுவதே
இணையத்தில்
இணையும்
இதயங்களின்
யதார்த்தம்...!!
இதயங்களை
இறுக்க
கட்டி வை
இணையத்தில்
தொலைத்து
இம்சையால்
இளைத்து
இறுகி
விடாதே...!!
தொலைத்து
தொலைத்து
கண்டெடுக்க
இதயம் ஒன்றும்
பொருளல்ல...!!
அது உயிர்வலி
தரும் உணர்வுகளின்
பிறப்பிடம்...!!
பத்திரமாய்
பக்குவப்படுத்தி
விட்டால்
பலமிழக்க
மாட்டாய்...!!
இயந்திர
வாழ்வின்
இயல்பினால்
பணிநிமித்தமாக
இணையத்தில்
இணையும்போது
இரண்டு அடி
தள்ளியே வை
உன் இதயத்தை...!!
✍️ கவிரசிகை......
...... சுகந்தீனா