ஆசையை
வளர்த்துக் கொள்
நண்பா...!
தகுதி வேண்டும்
என்ற ஆசையை
வளர்த்துக் கொள்...!
தகுதி என்பது
தானாக வராது
மானிடா...!
அதை நாமாகத்தான்
உருவாக்கிக்கொள்ள
வேண்டும்...!
மண் அறையையே
நினைத்துக்
கொண்டிருந்தால்
இதுவே போதும்
என்ற மனநிலைதான்
உருவாகும்...!
தகுதி
வேண்டுமானால்...!
தகுதியை
உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றால்...!
அந்த தகுதிக்கான
ஆசைகளை
வெறியுடன்
வளர்த்துக்கொள்ள
வேண்டும்...!
அந்த ஆசையுடன்
கூடிய முயற்சிகளே
பின்னாளில் நம்மை
தகுதி உடையவர்களாக மாற்றிவிடும்...!
மண்ணறையையே
நினைத்து
சோர்ந்து
விடாதே மானிடா...!
தகுதியான
இடத்தை
அடைய
ஆசையுடன்
முயன்றுவிடு...!
தகுதியான
இடத்திற்கு
நீயும் தகுதியாவாய்...!!!
✍️கவிரசிகை.....
.......சுகந்தீனா