Header Ads Widget

Responsive Advertisement

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்



கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே
கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே.

தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவில்
வந்து நின்று பார்க்கிறது உள்ளிருந்து என்னில்.

நேரலை வகுப்புக்கு இடைவேளையா இப்போது
அது தானே நடக்கிறது தேசமெல்லாம் தற்போது.

முடியாது என்று சொல்லிச் செல்லவில்லை பின்னே
முயற்சி செய்து பார்ப்பதற்காய் வந்து நின்றாய் முன்னே.

அடியெடுத்து வைத்து விட்டாய் அசராமல் முன் செல்வாய்
பொடிப் பொடியாய் முன்னேறிக் குறிக்கோளை அடைந்திடுவாய்.

மலை தூக்கும் மாதவனைக் கண் முன்னே கண்டேன்
கல் தூக்கும் குழந்தையாம் உன்னில் நான் கண்டேன்.

முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி
முயன்றால் முடியாதது இல்லை இது நீதி.

வீரம் விளைந்த தேசத்தின் விழுதடா நீ கண்ணே
வேர்கள் பழுது பட்டாலும் தாங்கி நிற்பாய் விழுதாய்.

உன் வீட்டையும் தாய் நாட்டையும்
தாங்கி நிற்பாய் விழுதாய்.

*கிராத்தூரான்*