கல்லிலே ஓவியம் படைத்தான் இராசராசன்!அதைச்
சொல்லிலே ஓவியமாக்கிட முனைந்தேன் நானே!
கலையாத ஓவியமாய்க் கல்லை மாற்றினான்!
உளியென்ற தூரிகையால் அதை முப்பரிமாணமாக்கினான்!
கலமேறி கடல்கடந்து பலநாடு
வென்றும் மனம்நிறையாத மன்னன் கல்லோவியமாம்
பெரியகோவில்
படைத்ததிலேதான்
மனம்நிறைந்தான்!
அவன் உள்ளத்தின் உயர்வு போலவே விண்முட்டும் கற்கோபுரம்!
அதன் நிழலோ பூமியில் வீழாதென்பதோர் உலக அதிசயம்!
படுத்திருக்கும் காவல்நந்தியைப் பார்க்க பார்க்க பரவசமேற்படும்!
நெல்லால் கொழித்த தஞ்சையை இராசராசன் கல்லால் புனிதமாக்கினான்!
முதல்முறை வந்தவர்கள் பெரியகோவிலைப் பிரியமனதில்லாமல்
தவிப்பார்கள்!
கல்லுக்கும் காந்த ஈர்ப்புண்டு என்பதை உணர்வார்கள்!
கல்கூட மொழிபேசும் என்பதையும் அறிவார்கள்!
அந்த பேசும்கற்சித்திரத்துள்
மெய்மறந்து மனமுருகி கற்சிலையாக நிற்பார்கள்!
பிரமாண்டத்தைச் சோழன் கல்லில் காட்டினான்!
உலகமக்கள்
யாவருடைய மனங்களிலும் அன்பால் அன்பால்
நிறைந்தான்.
த.ஹேமாவதி
கோளூர்