நிறம் மாறினாலும் அளவில் சுருங்காத வானம்!
சுட்டெரித்தாலும் இரவில் காணாமல் போகும் ஞாயிறு!
பிறைபிறையாய்த் தேய்ந்தாலும் மீண்டும் வளர்கின்ற திங்கள்!
மிகநீண்ட தூரத்தில் இருந்தாலும் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் நட்சத்திரங்கள்!
எண்ணம்போல் சுதந்தரமாய் விண்ணில் ஊர்வலமாய்ப் போகும் மேகக்கூட்டங்கள்!
பகல்முழுக்க
மின்விளக்கு ஒளிர்திரையாய்
இரவெல்லாம்
மெழுகுவர்த்தி ஒளிர்திரையாய்
சிலசமயம் வறண்டபாலைவனமாய்
சிலசமயம் கொட்டும்மழையால்
குளிர்சோலையாய்
மொத்தத்தில்
*வானமே*
உன்னை நான் காதலிக்கிறேன்!
த.ஹேமாவதி
கோளூர்