உள்ளங்கை ரேகையாய்க்கிடக்கிறது
செல்லம்மா...!
யாராலோ
எழுதப்பட்ட நமக்கான
காலம்...
இன்னும் நிரப்ப இயலாத வெற்றிடங்களாய்...!
நீயற்ற நான்
நானற்ற நீ
சாத்தியமில்லையடி
செல்லம்மா....!
ஆயினுமென்
சாத்தியமே
நாமற்ற உலகு...!
எப்போது
எழுதப்போகிறோம்
செல்லம்மா....?
எனக்கான கேள்விகளுக்குப்
பதிலை நீயும்...
உனக்கான
கேள்விகளுக்குப்
பதிலை நானும்...
*பொன்.இரவீந்திரன்*