உலகத்தின் நதியனைத்தும்
கடலிலே வீழ்ந்தாலும்
கடல்கொண்ட உப்புச்சுவை வீழ்வதுண்டோ?
எத்தனையோ களப்பிரர்கள் பாய்ந்தோடி வந்தார்கள்!
வேரோடு அழிக்க நினைத்தார்கள்!
வீழும் என நினைத்தார்கள்!
வீழவில்லை தமிழும்!
தமிழோடு சேர்ந்து வீழ்வான் தமிழனும் என நினைத்தார்கள்! நினைத்தது நடக்கவில்லை!
மூவேந்தரைத் தாண்டி தென்னகம் புகமுடியாமல் போன வடநாட்டரசர்கள் எவ்வளவோ கங்கணம்தான் கட்டியும் முட்டியும்
மோதிப்பார்த்தார்கள்!
ஆனாலும் வீழவில்லை தமிழும் தமிழனும்!
புதையுண்டதெல்லாம்
காட்சிக்கு வருகிறது ! கீழடிதான் தக்கதொரு சாட்சியாக நிற்கிறது தமிழன் வீழவில்லை எனச்சொல்லி பறைசாற்றுகிறது!
தான்மட்டும் வாழாது தன்னோடு சேர்த்து மற்றோரையும் வாழவைப்பதே தமிழின் பண்பாகும்!அதனாலே தழைத்தோங்கும் பிறமொழிகள் யாவும்!
எத்தனை பகை வந்தபோதும்
எத்தனை படை
எதிர்த்தபோதும்
எத்தனை தடை
தடுத்தபோதும்
கலங்காது அஞ்சாது
தயங்காது மயங்காது
குலையாது
அத்தனையும் வென்று பகை சாய்த்து
தடை உடைத்து
தஞ்சை பெரியகோயில் கோபுரமாய்த் தலைநிமிர்ந்து நிற்கிறது!
தமிழும் வீழாது!
தமிழனும் வீழான்!
என்பதற்கு
தஞ்சை பெரியகோயிலே சாட்சியன்றோ?
த.ஹேமாவதி
கோளூர்