Header Ads Widget

Responsive Advertisement

இதயம் - ஹேமாவதி

*இதயம்*

ஆசையின் எல்லை எதுவரை?
அது இதயத்தின் ஓசை அடங்கும்வரை!

உயிர்களின் ஓட்டம் எதுவரை?
அது இதயத்தின் ஓட்டம் நிற்கும்வரை!

மனிதனின் ஆட்டம் எதுவரை?
அது இதயத்தின் ஆட்டம் முடியும்வரை!

சிந்தனையின் உதயம் இதயமென்று
தவறாய்ச் சிந்திப்போர் அறிந்திடுக அது மூளையின் செயலாகும்!
மூளையின் செயலுக்கு உறுதுணையாய்க் குருதியினை உந்திச் செலுத்துவது இதயத்தின் செயலாகும்!

சிரித்து வாழ்பவர் இதயம் மலர்த்தோட்டமாகும்!
சினந்து வாழ்பவர் இதயம் எரிமலைப்பிழம்பாகும்!
பிறர்கெட கேடுநினைப்பவர் இதயம்  எங்கே நிம்மதி காணும்?
பிறர்வாழ
நலம்நாடி வாழ்பவர் இதயம் எங்ஙனம் நலம்கெடும்?

த.ஹேமாவதி
கோளூர்