தாமரை மலர் போல ஆசையில் மிதந்து
விட்டேன்,,,
காலங்கள் மாற இங்கு கதைகளும் கேட்டு கொண்டேன்,,,
தீபங்கள் ஒளி போல தெருவெங்கும் நானிருந்தேன்,,,
வெண்ணிலவே! உன்னைக் கண்டு என்னையே மறந்திருந்தேன்,,,,
வெள்ளி நிலவொளி என் மேலே வீசி வர,
வேடிக்கை
பார்த்தவரும் கயலாக துள்ளி விழ,
அல்லி மலரெல்லாம் ஆசையோடு பூத்து விட,
தள்ளி நிற்பதேன்
நீ,கள்ளி காட்டுக்குள்ளே?
சொல்லத் தெரியவில்லை எண்ணம் பல கோடி,,, மெல்லப் பார்க்கையிலே
மேகம்
மறைக்குதடி,,,
உள்ளம்,
கொடுத்து விட்டேன்
உலகை
விலை பேசி,,,
மெல்ல இறங்கி
வந்து மண்ணில் நீ யோசி,,,
இல்லாத கனவொன்று
மண்ணில் உனக்கும் வர,,,
அந்த பொல்லாத நினைவில்,
"கனவும் கண்டு மற",,,
சொல்லாத
சொல்லில்
உருவான ஜோடி,,,
நாம்,
தேரேறி போக
வாழ்த்துவோர் மனிதரும், தேவரும் மாயா
முனிவரும்
பல கோடி,,,,
பாலா,,,