நிலையில்லாத உலகு!
நிஜமில்லாத உறவுகள்!
துடுப்பைத்தேடும் படகுகளாய்,
தும்பைவிட்டு வாலைத்தேடும் .....
மனிதர் வாழும் பாழும் உலகிலே மெய் முகங்கள் போனது புதைகுழியிலே!
போலிச்சிரிப்பே எந்நாளிலும்
கேலிச்சிரிப்பைச் வெற்றிக்களிப்பில்
சிந்தியே உண்மையைத் தூக்கிலிடுமே
ஆறுதல் கூறும் பாவனை!
அரைநொடிக்குள் மாறுதல் சாதனை!
அக்கறை காட்டுதல் போல்நடித்து
ஆழக்குழி பறித்து அறிந்தே
அதில் தள்ளிவிடுவது அதன் மகாசாதனை!
எதில் தான் இல்லை போலிமுகங்களின்
ஊடுருவல் .....
மகளுக்கு மகள் பிறந்தால்
வாடிவிடும் மாமியின் முகம்:
மருமகளுக்கு மகன் பிறந்தால்
பொலிவதில்லையே !அதைமறைக்க
தேவைஅவளுக்கு போலிமுகம்!
தன்வீட்டார் நிழல் பட்டால் தண்ணோளிவீசும் மெய்முகம்.......!
மாற்றுவீட்டார் மேல்பட்ட காற்று தீண்டிய நிழலுக்கே
வெந்து கனல்வது பின்னர்......
மறைந்து, மறைப்பது போலிமுகம்!
“அகத்தினழகு முகத்தில் தெரியும்”
என்பதன் உண்மை மெய்முகமானால்....
ஒருநாள் வேடம் கலைந்தே
கரைந்தே போகும் போலிமுகம்!
🌹🌹வத்சலா🌹🌹