Header Ads Widget

Responsive Advertisement

கற்க கசடற - சுலீ. அனில் குமார்*

*கற்க கசடற*

"கற்க கசடற கற்பவை
கற்றபின்
நிற்க அதற்குத் தக"
என்று முப்பாட்டன் சொன்னதை முத்தாய்ப்பாய்
எடுத்துவிட்டு அப்பாடே சொல்லி நிற்பார் கற்க கசடற.

புத்தகத்தில் பிழைகளைப் பார்க்காமல் விட்டுவிட்டு
கேள்விகளைத் தவறுடன் அச்சடித்து வழங்கிவிட்டு
கவலையே கொள்ளாமல் படிப்போரிடம் சொல்லி நிற்பார்
கற்க கசடற.

பணத்தினை வழங்கியே பட்டமும் வாங்கிவிட்டு
தவறான வழியிலே பதவிகள் பெற்றுவிட்டு
குணவான்கள் போலவே சொல்லவும் சொல்லி நிற்பார்
கற்க கசடற.

பிழையெல்லாம் பொறுத்து விடு தவறெல்லாம் திருத்திவிடு
அதையெல்லாம் மறந்துவிடு ஆனால் ஒன்று நினைத்துவிடு
அதையெல்லாம் மறந்துவிடு ஆனால் ஒன்று நினைத்துவிடு.

கல்வி கற்றால் பின் உனக்கு வேறு துணை தேவையில்லை
என்கின்ற உண்மையதை உலகுக்குப் புரிய வைக்க
துணைக்காலே போடாமல் ஐயனவன் எழுதிவைத்த
அற்புதமாம் ஒரு குறள் தான்
கற்க கசடற.

கற்றலிலே என்ன பயன்
நிற்றலிலே உண்டு பயன்
கற்றதெல்லாம் விட்டுவிட்டு அற்ற செயல் செய்து வாழ்ந்தால்
பெற்றவரே பழித்து நிற்பார்
அதனாலே கற்போரே பாரினிலே நீ சிறக்க
கற்க கசடற.

*சுலீ. அனில் குமார்*