Header Ads Widget

Responsive Advertisement

மழை பெய்தாலும் .. தெய்வானை




அடைமழை
பெய்தாலும்
சட்டென்று வடிந்திடும்
வசதி வேண்டும் ...

மழைக்காலம்
குடைபிடித்து
மழை ரசிக்க
வேண்டும் ..

சேறின்றி
சகதியின்றி
சாலை இருக்க
வேண்டும் ..

சுத்தமாக
தெருவெல்லாம்
பளிச்சென்று
இருந்தால் ...

போக்குவரத்து
வாகனங்களும்
தடங்களும் சீராக
இருந்தால் ....

முகம் சுளிக்காமல்
மூக்கைப் பொத்தாமல்
தெருவில்
நடக்க முடிந்தால் ...

மழைக்காலம்
எல்லாம் நமக்கு
மகிழ்ச்சிக்
காலமாகும் ....

மழை வந்தாலே
மனதில் முளைக்கும்
பயம் அகல
வேண்டும் ...

மழைக்காலம்
வரும் இடர்  எல்லாம்
களையப்பட
வேண்டும்..

மழை வந்து
நிலம் நிறைந்து
வையம் சிறக்க
வேண்டும் ..  

தெய்வானை.