Header Ads Widget

Responsive Advertisement

சொல்லி மாளாத சோகம் - ஹேமாவதி

*சொல்லி மாளாத சோகம்*

வெளியே சொல்லாத சோகங்கள் பலவுண்டு மனத்தினிலே!
சொல்லும் சோகங்களும் சிலவுண்டு என்னிடத்தில்!
அவற்றுள்ளும்
சொல்லிமாளாத சோகங்கள் நிறையவே உண்டு!
தெருவோர நாயை
குட்டிகளுடன் கண்டால் மாளாத சோகத்தில் மூழ்குவேன்!
அவற்றின் பாதுகாப்பை எண்ணியே கலங்குவேன்!
வயதான ஆணையோ பெண்ணையோ நடைமேடைதன்னில்
நிராதாரவாய்க் கண்டாலோ மாளாத சோகத்தில் ஆழ்வேன்!இயன்ற உதவிகளும் செய்வேன்!
தலையில்லா தென்னைகளும் தலையில்லா பனைகளையும் காண்கையிலே கண்ணீரில் நனைந்திடுவேன்!
சொல்லிமாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!
இனத்தாலோ மதத்தாலோ மொழியாலோ வன்முறைகள் நேர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டால் சித்தம் கலங்கிடுவேன்!சொல்லி மாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!
இராணுவத்தில் நம்தேசம்  காக்க
உயிரிழந்த வீரர்கள் பற்றிய செய்திகேட்டால் சொல்லிமாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!
மழலையென்றும்
முதியவளென்றும்
பாராமல் பெண்ணைச் சீரழிக்கும் நாயினும் கீழானவர்கள் பற்றிய செய்திதனைக் கேட்டாலோ பார்த்தாலோ உள்ளம் கலங்கிடுவேன்!
சொல்லிமாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!

த.ஹேமாவதி
கோளூர்