Header Ads Widget

Responsive Advertisement

நட்பு



இனிது இனிது ஏகாந்தம் இனிதுதான் ஆனால் அதைவிட இனிது நட்பு!

உணர்வுகளைப் பகிர்ந்திட

இன்பங்களைப்

பெருக்கிட!

துன்பங்களைக்

குறைத்திட!

விழிநீரைத் துடைத்திட!

மொழித்தேனில்

நனைந்திட!

ஊரெங்கும் உலாபோக!

தனிமையைப்

போக்கிட!

தொலைதூரம் சென்றாலும்

அலைபேசியில்

பேசிமகிழ்ந்திட!

உனக்கென்றும் துணையாக நான்

உன்கூடவே நிழலாக இருப்பேன்

என்பதை உணர்த்த!

கட்டாயம் ஆளுக்கொரு நட்பு இங்கே வேண்டும்!

அப்படியொரு நட்பு வாய்த்துவிட்டால்

கடலே பொங்கினாலும்

மலையே

சாய்ந்தாலும்

வானமே இடிந்தாலும்

நிலமே

பிளந்தாலும்

கப்பலே கவிழ்ந்தாலும்

கவலை படவேண்டாம்!

வள்ளுவன் வாக்கின்படி

உடுக்கை இழந்தவன்கை போல 

நண்பனின் கை

உடனே உதவ ஓடிவரும்!

அகத்தில் மலர்ந்த நட்பின் வாசம்

சோகங்கள் அனைத்தையும்

ஆக்கிடும் நாசம்!

பெற்றிடுமே உன்வாழ்வோ பூவின்வாசம்!

பள்ளியில் பூத்திடும் பால்யநட்பு சிலருக்கு வேர்விட்டுநிலைக்கும் இறுதிவரை!

கல்லூரியில் வண்ணக்கனவுகள்

காலத்தில் பூத்திடும் நட்பு ஆயிரம்ஆனை பலத்தைத் தந்திடும்!

நல்லநட்பு ஆலமரம்போல

விழுதுகளுடன் நிலைத்துநிற்கும்!

அருகுபோல் வேரோடி படர்ந்திருக்கும்!


த.ஹேமாவதி

கோளூர்