என் முகம் காணா முன்னமே
என்னை கொஞ்சி முதத்தமிட்டு
ஊணும் கொடுத்து
உயிரும் கொடுத்து
கல்வியும் கொடுத்து
அறிவும் கொடுத்து
ஆற்றலும் கொடுத்து
உண்மையை போதித்து
அறநெறியை காண்பித்து
பாலுடன் பண்பையும் ஊட்டி
பாசத்தையும் கூட்டி
நேசத்தையும் காட்டி
வயிற்றையும் நிரப்பி
செவியையும் நிரப்பி
நன்மையை செய்யவும்
தீமையை விட்டு அகலவும் வழிகாட்டி என்னை பட்டதாரி ஆக்கி
அரசு வேலையும் வாங்கித் தந்து
என் தலையை உயர்த்தி
இவ்வுலகில் என்னை தலை நிமிர்ந்து நடக்கச் செய்த என் தாய் தந்தையரே
எனக்கு தேவதை ( கள்)
தி.பத்மாசினி சுந்தரராமன்