Header Ads Widget

Responsive Advertisement

என்றும் வாழ்க.... இனிய நட்பு


துவண்டு கிடந்தால் தோளில் கையிட்டு ...

'கலங்காதே....

சரியாகும் '....

சொன்னது தோழமை ...


எதை எப்படிச் செய்வது என்று ..புரியாமல் நின்றபோது ..

இதை இப்படிச் செய் என்று சொன்னது தோழமை .....


உறவுகள் வரும் முன்னே ..ஓடோடி வந்து நின்று ..உன் உறவும் நான் அல்லவா என்றே  சொன்னது தோழமை ...

 

எப்படி எங்கே தவித்திருந்த போதும் இருளாய் மழையாய் இருந்திட்டபோதும் ...

உதவிட நான் இருக்கிறேன் ..ஓடி வந்தது தோழமை .....


திறமைகள் கண்டு ....மகிழ்ச்சியும் கொண்டு..உயர்த்திடும் வழி சொல்லி ... தூண்டி ..வளர்த்தது..

தோழமை ...


பெற்றோரிடமும் உற்றவரிடமும்..சொல்ல முடியாத போதும் ..

எல்லாமும் சொல்ல 

ஏற்றது தோழமை ...


சிக்கலை எல்லாம் சிரித்துக்கொண்டே ..

கேலியும் ஆக்கி  கிண்டலும் செய்து.. இலகுவான மனம்  பெறவைத்து

இனிக்கச் செய்வது தோழமை...


நினைத்துப் பார்க்கவும் நினைத்து நினைத்துச்  சிரிக்கவும் ..சொல்லிச் சொல்லி..மகிழவும் ..

கண்டித்து திருத்தவும் ...

பகிர்ந்தே உண்ணவும் ..

தோழமையின் சிறந்த

உறவேதும் உள்ளதோ ... 


இந்த வாழ்வை இனிமையாக்கிட இனிய நட்புகள் சிலராவது வேண்டும் ..

கைக்கோர்த்து நடந்திட காயங்கள் ஆற்றிட கண்டிப்பாய் நட்புகள் 

நம் வாழ்வில் வேண்டும் ...


வாழிய நட்பது ...வாழ்கவே என்றென்றும் ....

வையம் அது வாழும் வரை வாழ்ந்து இருக்கும் நட்பு ...வாழிய நட்பு..


          தெய்வானை,

              மீஞ்சூர். 

👭👭👭👭👭👭👭