Header Ads Widget

Responsive Advertisement

வணங்குகிறேன்



தெளிவு பெற்ற மதியினாய் ....


தேர்ந்த அழகு சொல்கிறாய் ...


தீர்க்கமான 

செயலினாய்..


தீக்குள்அன்பு

விதைக்கிறாய் ..


சொல்லில் கரும்பு வளர்க்கிறாய் ..


சுற்றி மனிதம் 

ஈர்க்கிறாய் ..


உண்மை சொல்லிப் போகிறாய் ...


உணர்ந்தால் அன்பு கொள்கிறாய் ..


தமிழ் காதல் கொண்டு தகிக்கிறாய்...


அறியாமை கண்டு தவிக்கிறாய் ...


ஆற்றாமை கண்டால் வெறுக்கிறாய் ....


உன்மை கண்டால் வாழ்த்துகிறாய்...


உயர உயரப் 

பறக்கிறாய் .....


உற்சாகம் வந்தால்

துள்ளுகிறாய் ....


உயர்வு கொள்ளத் தூண்டுகிறாய் ....


அறியாமை களையத் தேடுகிறாய்....


பிழை கண்டால் கதவு மூடுகிறாய்...


பாரதிகண்ட மதியினாய்

பணிந்தே உன்னை வணங்குவேன் ....


          தெய்வானை,

               மீஞ்சூர்.