Header Ads Widget

Responsive Advertisement

நிலா நாட்களில் ...


நிலா நாட்களில் ...தினமும் மாலைகளில் .... நாம் ஆடிக்களித்தது நினைவில்லையா ... 


கண்ணாமூச்சி ஆடினோம் ..

கரகரவென்று

சுற்றினோம் ....


 பூப்பறிக்கச் 

சென்றோம் ...

பாண்டியாட்டம் குதித்தோம் ..


மரக் குரங்காய்த் தாவினோம் ..

மரமெல்லாம் ஊஞ்சல் ஆடினோம் ...


கிட்டிப்புள் விளையாடினோம்...

கோலிக் குண்டுகள் அடித்தோம் ...


பம்பரம் போல சுற்றினோம் ..

பம்பரம் கூடச் சுற்றினோம் ...


கபடி ஆடக்

கூடினோம் ...

கல்லாங்காயும்

ஆடினோம்...


கூட்டாஞ்சோறு

ஆக்கியே ..

கூடி உண்டு 

மகிழ்ந்தோம்... 


சண்டைகள் இட்டுப் பிரிந்தோம்...

சமாதானமும் செய்துகொண்டோம்...


நம் இளமைக்கால இன்பங்களில்....

எதுதான் அறிவர் நம் பிள்ளைகளே ...


வீடு வந்தால் படி என்கிறோம்....

விடிந்தால் போதும் படி என்கிறோம் ....


பாடும் பறவை

கூட்டமே போல் ...

ஆடிக் களிக்கும் தும்பிகள் போல் ...


கூடிக் களித்து மகிழ வைப்போம் ....

வலிமை பெறும் வழி அது என்போம் ...


அறிந்துகொள்வோம் தோழர்களே ...

அவை  நம்  குழந்தையின் உரிமைகளே....

           

            தெய்வானை ,

                  மீஞ்சூர்.