Header Ads Widget

Responsive Advertisement

பேதைகளாய்....

உருண்டோடும்
உலகத்தில் 
மிரண்டோடும்
மனிதர்கள்..

உழைக்கும் வயதில்
மலைக்கும் செயலில்
இளைய சமூகமே
இன்பத்தை இலவசமாக
பெறுவதில்
ஆனந்த கொள்வதில்
ஆவலாய்..

ஆசைகளைக் குறிக்கோளாக்குவதை
குறுக்குபுத்தியில்
முயலும்
குணவான்களே
குறுகிய காலத்தில்
ஏதும்நடப்பதில்லை
என்று ஏதுமறியா
பேதைகளாய்
மனிதர்கள்கூட்டம்..

நல்ல உலகம்
நாளை மலரும்
நல்ல சிந்தனை இன்றே
உதித்தால்
மதிப்பும் மாண்பும்
உங்களின் இருப்பிடம்..

வாழும் மனிதா
வாழ்க்கை வரையறைக்குள்தான்
என்று உணர்வாய்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..