Header Ads Widget

Responsive Advertisement

சாரலில் நனைந்தேன்!



பலநாள்கள்
விளக்கெரியாமல்
இருண்டிருந்த வீட்டில் திடீரென விளக்கேற்றி வெளிச்சத்தை உண்டாக்கியதைப் போல

நட்டு வளர்த்த மரம்
பன்னெடுங்காலமாய்ப்
பூக்காமல் காய்க்காமல் வெற்றுமரமாயிருந்து
திடீரென கிளைகள்தோறும் பூப்பூவாய்ப் பூத்துக் காய்த்துக் கனிகளாய்த் தொங்கியதைப் போல்

வறண்டநிலத்தில்
கிணறுதோண்ட
பலநாளாய்த் தோண்டதோண்ட
நீர்முகமே காணாது
தவித்தவேளையில்
திடீரென சுழித்தப்படி நீரானதுப் பொங்கியதைப் போல்

கோடானுகோடி மயிலிறகுகள் விண்ணின்று மண்மீதில் வீழ்தல்போல்

நேற்று பெய்தச் சாரலிலே நான் நனைந்தேன்!
தேனுண்ட வண்டினமாய் நானானேன்!
சாரலின் குளுமையிலே உள்ளம் பூரித்தேன்!
சாரலில் நனையவைத்த அந்தவானுக்கு நன்றிகளைச் சொல்லி மகிழ்ந்தேன்!

த.ஹேமாவதி
கோளூர்