Header Ads Widget

Responsive Advertisement

கவிஞர்கள் சங்கமம்



நிலா

இலக்கியத்தில் நீ இல்லாத இடமே இல்லை
கவிஞர்களுக்கு கருப்பொருளாகின்றாய்
காதலர்களுக்கு காவலாகின்றாய்
குழந்தைகளுக்கு வேடிக்கைப் பொருளாகின்றாய்
திருடர்களுக்கு திகிலாகின்றாய்
மின்விளக்கே இல்லா ஊர்களுக்கு ஒளி விளக்காகின்றாய்
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் காரணமாகின்றாய்
ஆராய்ச்சியாளர்களுக்கு அதிசயமாகின்றாய்
விஞ்ஞானிகளுக்கு விந்தையாகின்றாய்
தொடமுடியா தூரத்தில் நீயிருந்தாலும்
எங்களுக்கு உம்மை  தொட்டுப் பார்க்க ஆசை
நிஜத்தில் தொட முடியவில்லையென்றாலும்
நிழலால் தொட்டுப் பார்க்கின்றோம் உம்மை தண்ணீரிலே

நீயும் சூரியனும் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரோ
காணாமலே நட்பு பூண்டு 
சூரியனார் தன்னால் உன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்

தி.பத்மாசினி சுந்தரராமன்